Thursday, February 13, 2014

கனத்த இதயத்துடன் , என் சினிமா ஆசானுக்கு காலம் கடந்து ஒரு கடிதம்

ஆறு வருடம் கழிந்து , பிழைகளுடன் (மன்னிக்கவும் ) மறுபடியும் ,  என்

ஆசானே,

இதை கடிதம் மூலமோ , blogin மூலமோ எழுதுவேன் என்று, என்றும் எண்ணியது இல்லை. இதை உங்களிடம்  நேரடியாக பகிர்ந்து கொள்ளாததற்கு காலம், இயற்கை இவற்றிலும்  மேலாக என்னை நானே  பழிகின்றேன் .

நான் என்னை துர்பாக்கியசாலி என்று எண்ணிய தருணம் வெகு குறைவு. இன்று அதை ஆணித்தனமாக நம்ப செய்துவிட்டீர் .

சினிமா  : நான் விரும்பி உட்கொள்ளும் , அல்லது உட்கொள்ளும் ஒரே போதை. இந்த பழக்கத்தை பெரிதும் எனக்கு அறிமுகபடுத்தியது மணிரத்தினம், பாலச்சந்தர், மகேந்திரன் என்று பலர் இருந்தாலும் , அதில் இருந்து மீள தேவையில்லை என்றும், அப்போதையை என்றும் உட்கொள்ள என்னை தூண்டியவர் நீர்தான்.

சினிமாவை பற்றி எந்த அடிப்படை அறிவும் இல்லாதபோதும் , உங்கள்  சினிமாவை மாறுபட்டதாக காண்பித்தது உங்கள்  ஒளிப்பதிவுதான் என்று நான் உணர வெகு காலம் ஆகவில்லை . உங்கள் பெயர் தெரியாது அனால் வீடு திரைப்படம் எடுத்தவர்தான் இதை எடுத்திருக்க வேண்டும் என்று உங்கள் மற்ற படங்களின் காட்சிகளோ   ( Neengal Kettavai , Rettai Vaal Kuruvi ,Sathi Leelavathi , Marupadiyum , Vanna Vanna Pookkal , Raman Abdullah ,Olangal etc  ) அல்லது பாடல்களோ காண்பித்தன . 

சினிமாவின் ABC கற்ற நாட்களில் வெகுஜென மக்களை  போல எனக்கும்  பிடித்திருந்தது  தங்களின் பேர் போன ( ரெட்டை வால்  குருவி, ராமன் அப்துல்லாஹ், சதிலீலாவதி    மற்றும்  சில ) படங்கள் தான்.  ஆனால்  என்னை அடுத்த வகுப்புகளுக்கு இட்டு சென்றது உங்கள் உன்னதமான சினிமாக்கள் ( வீடு,   மறுபடியும், நீலாக்ஷ்னா , மூன்றாம் பிறை, மூடுபனி ) தான்.

நீங்களும் , உங்கள் ஆருயிர் நண்பர் இசைஞானி இளையராஜா அவர்கள் தந்த பாடல்கள் அனைத்தும் வெறும் பாடல்கள் அல்ல, இந்திய சினிமா படைப்புகளுக்கு  ஒரு மகுடம்.  கண்ணே கலைமானே , Sukkalley Thochave , தும்பி வா , என் இனிய பொன் நிலாவே , கனவு காணும் , கண்ணன் வந்து , நலம் வாழ  என்று நீங்கள் தந்த ஒவொன்றும் அமிர்தம்.

திரைக்கதையிலும் , காட்சிகளிலும்   வேகம் ஒரு முக்கியமான அங்கம் வகித்த வேளையிலும் ( indian cinemaவின் வேகம் 2 1/2 மணி நேரம் என்பது அறிந்ததே. இது இவர்களின் டக்கு ) உங்கள் சினிமா தனித்தே இருந்தது.

எனக்கு திரைக்கதை, வசனம், ஒளி்ப்பதிவு , இசை என்று ஒரு சினிமாவில் இருந்து பல நுட்பங்களை கற்று தந்தவர் நீங்கள் .இதை தவிர எனக்கு நீங்கள் கற்று தங்க மிக பெரிய பாடம் : NEVER  COMPROMISE ...

உங்களின் சிஷ்யர்கள் இதைதான் பின்பற்றுகிறார்கள் . நானும் அவ்வாரே நடந்திட ( பார்த்திட அல்லவா ஆசைப்பட்டேன் , அதற்குள் உமகேனய்யா அவசரம்) உங்கள் ஆசி தேவை .

நாங்கள் உங்களை மறகிளோம் ,

மலைகள், மேகங்கள் , மலைவாழ் அழகிகள் ,  முதியோர் , நடுத்தர குடும்பம், அணைத்து மலைதேசங்கள் , அம்மா, மழலையின் சிரிப்பு இதெற்கெல்லாம் மேலாக இசை ( இளையராஜா ரெண்டும் ஒன்றுதான் ) , ஒளிப்பதிவு , யதார்த்தம் இனி நல்ல துணைக்காக ஏங்கி தவிக்கும்


உங்கள் ஏகலைவனில் ஒருவன்